Categories
கவிதை முத்துக்கள்

காதலெனும் புது வெள்ளம்

அன்பே,
மதி மயங்கித் தான் போனேன்
உன் ஒரு கண் சிமிட்டலில்…
ஆர்வமான பார்வையுடன்
நீ பறக்க விட்ட ஒற்றை முத்தம்
குறித் தப்பாமல் என் உதட்டில்
வந்து தீண்டியது…
தடுமாறித் தான் போனேன்…
விழித்துக் கொண்டன உனக்கான
என் காதல் உணர்வுகள்…

அணை போட முடியாமல்
தத்தளிக்கிறேன்.. காதலெனும்
புது வெள்ளத்தில், என் அன்பே…

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.